தமிழர்களே பரிதாபப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட.. கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு வந்த பரிதாப நிலை.!!
kumarasamy very sad
கர்நாடகாவில் தேர்தல் முடிவிற்கு பின் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக குமாரசாமியும், துணை முதல்வராக பரமேஸ்வரும் பதவி ஏற்றுள்ளனர்.
அமைச்சரவையில் 22 இடங்கள் காங்கிரசுக்கும், 12 இடங்கள் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தான் ஒரு முதலமைச்சராக செயல்பட முடியவில்லை என்றும், ஒரு உதவியாளர் போலத்தான் வேலை செய்கிறேன் என்றும் கர்நாடக மாநில குமாரசாமி தனது கட்சி எம்எல்ஏக்களிடம் புலம்பி வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில முதல்வர் இப்படி புலம்புது இது முதல் முறை அல்ல, ஏற்கனவே ஒருமுறை தான் வகிக்கும் இந்த முதலமைச்சர் பதவி ரோஜா பூ படுக்கை அல்ல, முள் படுக்கை என்று குமாரசாமி தெரிவித்திருந்தார். இதற்க்கு காங்கிரஸ் கட்சியின் மேலிடம் தான் கரணம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.