திடீர் திருப்பம்..! தினகரன் கட்சியில் சேர விருப்பம்..!! நேரில் சந்தித்து பேசிய சரிதா நாயர்..!!!
திடீர் திருப்பம்..! தினகரன் கட்சியில் சேர விருப்பம்..!! நேரில் சந்தித்து பேசிய சரிதா நாயர்..!!!
முன்னாள் தமிழக முன்னாள் அமைச்சர் பச்சைமாலை சந்தித்து பேசிய சரிதா நாயர் டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர விரும்புவதாக அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கேரள மாநில முன்னால் முதல்வர் உம்மன் சாண்டி ஆட்சியின் போது அம்மாநில பெண் தொழிலதிபரான சரிதா நாயர் மீது, சோலார் பேனல் மோசடி வழக்கு பதியப்பட்டு சிறை சென்றார்.
பின்னர், வழக்கு தொடர்பான விசாரணையின் போது முன்னால் முதல்வர் உம்மன் சாண்டி மீது செக்ஸ் புகார் கூறி, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள், முதலமைச்சர் அலுவலக ஊழியர்கள் உள்பட பலரும் சிக்கினர்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் ஜாமீனில் வெளிவந்த சரிதா நாயர் கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் தக்கலை பகுதியில் சிறு தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தார். இதற்காக அடிக்கடி குமரி மாவட்டம் வந்து களியக்காவிளை, நாகர் கோவில் பகுதிகளில் தங்குவது வழக்கம்.
இந்நிலையில், திடீரென நேற்று நாகர்கோவில் தம்மத்துகோணத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பச்சைமால் வீட்டிற்கு நேரில் சென்று பேசிய சரிதா நாயர், பச்சைமாலுக்கு சால்வை அணிவித்ததோடு, டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்காக டி.டி.வி. தினகரனுடன் பேசி நேரம் வாங்கித்தரும்படியும் கேட்டுள்ளார்.
அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பச்சைமால், இந்த தகவலை கட்சியின் மேலிடத்திற்கு தெரிவித்து, அவர்களின் ஒப்புதல் கிடைத்த பின் முடிவை கூறுவதாகவும் தெரிவித்தார். இந்த விடயம் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
KERALA SARITHA NAAYAR JOINT TO AMMK PARTY