கலைஞரின் மகள் நானல்லவா! நிரூபித்துக்காட்டிய கனிமொழி! நடக்கும் அதிகாரப்போர், சமாளிப்பாரா ஸ்டாலின்!
kanimozhi proven dmk is caste base party
திமுக மகளிர் அணி தலைவி, மாநிலங்களவை திமுக குழு தலைவர், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகள் என பன்முகம் கொண்டவர் கனிமொழி. இவர் அண்மையில் திமுக தலைமை உத்தரவிட்டால் தூத்துக்குடி தொகுதியில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார். இது இப்பொழுது எடுக்கப்பட்ட ஒரு முடிவு அல்ல இது கலைஞர் உயிருடன் இருக்கும் பொழுதே முன்கூட்டியே திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்பது பின்னணியில் வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
மத்திய அரசின் முன்மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு தூத்துக்குடி தொகுதியில் உள்ள வெங்கிடேசபுரம் என்ற கிராமத்தினை தேர்ந்தெடுத்து கனிமொழி அங்கு மக்கள் பணிகளை செய்து வந்துள்ளார். மேலும் அங்கு கனிமொழியின் தாயார் சமுதாயமான நாடார் சமுதாயத்தை சார்ந்தவர்கள் அதிகம் வசிப்பதால் அந்த தொகுதியை தனக்கு பாதுகாப்பான தொகுதியாக மாற்றிக்கொள்வதில் கனிமொழி மும்முரமாக செயல்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.
அவர் அங்கு அறிவித்த திட்டங்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியாத காரணத்தினால் அந்தத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அதிகாரிகளிடம் அங்கு உள்ள நாடார் சமுதாய அமைப்புகள் சென்று முறையிட்டுள்ளனர். தன்னுடைய நாடார் சமுதாய மக்களின் செல்வாக்கில் வெற்றி பெற வேண்டும் என்ற கணக்கில் கனிமொழி அந்த பகுதியை தேர்ந்தெடுத்து உள்ளது இதன் மூலம் வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த மாதம் ஜனவரி 12ம் தேதி நாடார் மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கனிமொழியையும், அவரது தாயாரையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதனையொட்டி திமுக நடத்தி வரும் கிராமசபை கூட்டங்களை தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தியுள்ளார் கனிமொழி. மேலும் அவர் அவ்வப்போது நாடார் சமுதாய கூட்டங்களில் கலந்து கொண்டும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் கொள்கையில் சாதி இல்லை என திமுக கொள்கை கொண்டு இருந்தாலும் அந்தந்த தொகுதியில் எந்த சமுதாயம் பெரும்பான்மையோ அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் சீட் கொடுப்பது கலைஞர் காலத்திலிருந்தே வழக்கமாக தான் இருக்கிறது. தனது தந்தையின் பாணியையே கையில் எடுத்துள்ள கனிமொழி தூத்துக்குடி தொகுதியினை தனக்கு பாதுகாப்பான பகுதியாக தேர்ந்தெடுத்துள்ளார். இதன் மூலம் திமுகவின் சாதி அரசியலை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளார். இது மட்டும் இல்லாது அண்மையில் நடந்த ரெட்டியார் சங்க மாநாட்டில் திமுகவின் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கேஆர் நேருவும் கலந்து கொண்டது திமுக கட்சியினுடைய கொள்கைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.
கனிமொழி இரண்டுமுறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போதும் தேர்தலில் நிற்பது இதுவே முதல்முறையாகும். கடந்த முறை அவர் மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற பெரிய சிக்கல் நிலவிய நிலையில் கலைஞரின் சாமர்த்தியம் இருந்தது. தேமுதிக வாக்குகள் சிதறியது அதனால் கனிமொழி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்.
அவருடைய பதவி காலம் இந்த வருடம் ஜூலை மாதம் முடிவடைந்த நிலையில் டெல்லியில் தன்னுடைய முக்கியத்துவத்தை தக்கவைத்துக்கொள்ள தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்கு செல்ல வேண்டும் என கனிமொழி திட்டமிட்டுள்ளார். அதனால் தனக்கு பாதுகாப்பாக ஒரு தொகுதியை தனது சமுதாய மக்கள் அதிகமாக வசிக்கும் தூத்துக்குடி தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த நீண்ட கால திட்டத்தினை ஒட்டியே அவர் அங்கு நடைபெற்ற போராட்டங்களில் தலைகாட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.
ஆனால் மறுபுறம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வைத்து கனிமொழியை மாநில அமைச்சராக்கி மாநிலத்திற்குள் தனது கட்டுப்பாட்டிற்குள் சுருக்கிவிட வேண்டும் என்று ஸ்டாலின் நினைப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் சாதிக்கபோவது கனிமொழியா? ஸ்டாலினா என பொறுத்திருந்து பார்ப்போம்!
English Summary
kanimozhi proven dmk is caste base party