யாரும் எதிர்பார்க்காத ஒன்று..! வெகு நாட்களாக போட்ட திட்டம், பிப்ரவரி 21ல் அரங்கேற்றம்..! ரஜினிக்கு முன்னரே முந்தி கொண்ட கமல்.. - Seithipunal
Seithipunal


கட்சி தொடர்பாக இவரது அறிக்கையில் கூறி இருப்பது,

என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு பல முறை நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் மீறிய கடமைகள் என் மனதில் உண்டு..

அக்கடமைகளின் ஆரம்ப கட்டமாக எம்மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து, வருகிற பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி தொடங்க உள்ளேன்

இது நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த பயணம் தான்.. மக்களுடனான இந்தச் சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என்னுடைய புரிதலுக்காக,   எனக்கான கல்வி. நான் கற்று கொள்ள வேண்டிய ஒன்று..

இதை மக்களோடு மக்களாக,  தேசிய ஒருமைப்பட்டுக்கு எடுத்துகாட்டாய் இருக்கும் ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21 ஆம் தேதி என் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளேன்..

இது என் தேசம், இதை நான் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மட்டும் இருந்தால் போதாது,. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மட்டுமல்ல, பின்பற்றவும் தான்..

நாமெல்லாம் கை கோர்த்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம், அந்த நாயகர்களைச் சந்திக்கத்தான் நான் புறப்பட உள்ளேன்..

நான் இந்த முடிவை எடுத்த உடன்,  இது ஆட்சியைப் பிடிக்க திட்டமா? என்று பலர் கேட்பார்கள்.

ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா?  இது குடிமக்களின் அரசு, அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும்.

அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அந்த கடமை அனைவருக்கும் உண்டு.. அதை நோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தை துவங்குகிறேன்... கரம் கோர்த்திடுங்கள், களத்தில் சந்திப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal hassan going to start a new party


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->