எல்லாமும் எனக்கு தான்.! ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு ஆப்பு இருக்கு.!! பீதியை கிளப்பிய ஜெ.தீபா.!!
எல்லாமும் எனக்கு தான்.! ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு ஆப்பு இருக்கு.!! பீதியை கிளப்பிய ஜெ.தீபா.!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகித்த அனைத்து பதவிகளையும் ரத்த வாரிசு என்ற அடிப்படையில் சட்டபூர்வமாக தான் வகிக்க முடியும் என ம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொது செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற அக்கட்சியின் கூட்டத்தில் ஜெ.தீபா கலந்து பேசியதாவது, ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சதிகள், சூழ்ச்சிகள், மர்மங்கள் என்ன என்று இதுவரை தெளிவாகவில்லை. எல்லாம் மறைக்கப்பட்டுள்ளன. அதிமுக-வின் ஒன்றரை கோடி தெண்டர்களும், தமிழக மக்களும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்.
அவரின் மறைவுக்கு பின் யார், யாரோ இன்று மகுடம் சூட்டியிருக்கிறார்கள். வேறு வழியின்றி மக்களும் அதை சகித்து கொள்கின்றனர். நீட் தேர்வு, 8 வழிச்சாலை திட்டம் போன்றவற்றை ஜெயலலிதா இருந்திருந்தால் விட்டுஇருக்க மாட்டார்.துப்பாக்கி சூடும் நடந்திருக்காது. அதிமுக பொது செயலாளர்களை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் சட்ட விதிகளை திருத்தி முறைகேடான வகையில் பதவியேற்றுள்ளனர்.
நான் அதிமுக-வில் நான் அடிப்படை உறுப்பினர் இல்லை, ஆனால், ஜெயலலிதா பதவிவகித்த அனைத்து துறையிலும், ரத்த வாரிசு என்ற அடிப்படையில் சட்டபூர்வமாக நான் வகிக்க முடியும். தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ், இபிஎஸ். தலைமை பொறுப்பை ஏற்று கொண்டதை எதிர்த்து சட்ட ரீதியாக போராடுவேன். அதிமுக-வை கைப்பற்றி ஜெயலலிதா விட்டு சென்ற அணைத்து பணிகளையும் உறுதியாக தொடர்வேன் என்று உறுதியளிக்கிறேன்.