இறுதி கட்டத்தில் இரட்டை இலை.! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! பரபரப்பாகும் ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி.!! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களால் அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதற்கிடையே சசிகலா சிறைக்கு சென்ற பிறகு தினகரன் தலைமையிலும், ஓபிஎஸ் தலைமையிலும் அணிகள் செயல்பட்டன.

அப்போது திடிரென தினகரன் அணியில் இருந்து பிரிந்த இபிஎஸ் அணியினர் ஓபிஎஸ் அணியினருடன் இணைந்தனர். இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் ஆவணங்கள் தாக்கல் செய்தன. பின்னர் ஓபிஎஸ், மதுசூதனன் தலைமையிலான அணிக்கு கட்சியும், சின்னத்தையும் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன், சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில் அவ்வப்போது நடக்கும் வழக்கு விசாரணையில் வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்து வந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தினகரன் தொடர்ந்த வழக்கில் நேற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ''இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும். அப்படி முடிவு எடுக்காவிட்டால் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு தீர்ப்பு வழங்கியது. 

இந்நிலையில், இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இல்லை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் இறுதி விசாரணை நிறைவு பெற்று, இரட்டை இலை சின்ன வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் பேட்டியில், இரட்டை இலை சின்ன வழக்கு: வரும் திங்கள்கிழமைக்குள் இரு தரப்பும் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IRATTAI ILAI SIMPLE CASE IN LAST STAGE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->