இந்தியாவில் சமூக வலைதளங்களை தடை செய்ய வேண்டும்-சோனியா காந்தி.! - Seithipunal
Seithipunal


இந்திய ஜனநாயகத்தில் சமூக ஊடகங்கள் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய அவர், இளைஞர்கள் சிந்தனையில் வெறுப்பு உணர்வை ஏற்படுத்தும் தவறான தகவல்களை சமூக வலைதளங்கள் பரப்புவதாகவும் இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்கள் செல்வாக்குச் செலுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் 2019 தேர்தலின்போது ரிலையன்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் விதிகளை மீறி பாஜகவுக்கு ஆதரவாக விளம்பரம் செய்தது என்றும் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

போலி விளம்பரங்களை தரும் செய்தி நிறுவனங்கள் போல பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பதிவு செய்கின்றனர். இது ஆபத்தானது என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India should ban social media Soniya Gandhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->