தற்போது வரை தமிழகத்தில் பதிவான வாக்குப்பதிவுகளின் விபரங்கள்.!! மக்களவை மற்றும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விபரங்கள்.!!   - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள் ஒத்துப்போக கூடிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தீவிர பிரச்சாரத்திலும்., வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நிறைவு பெற்ற நிலையில்., இன்று தேர்தல் வாக்குபதிவிற்கான நாள் ஆகும். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை தொகுதியில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 840 நபர்கள் வேட்பாளர்களாகவும்., 18 தொகுதிக்குகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமார் 277 நபர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டு., காலை சுமார் 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கப்பட்டு மாலை சுமார் 6 மணிவரை வாக்குப்பதிவானது நடைபெறும். வாக்குசாவடி மையத்திற்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையில் ஈடுபட காவல் துறையினர் மற்றும் துணை இராணுவ படையினர் என்று பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

காலை முதலாகவே மக்கள்., இளைஞர்கள்., திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்களின் வாக்குகளை வரிசையில் காத்திருந்து செலுத்தி வருகின்றனர். தற்போது வரை தமிழகத்தில் மொத்தமாக சுமார் 39.49 விழுக்காடு அளவிற்கு வாக்குகள் பதிவாகியுள்ளது. 

மதியம் ஒரு மணி நிலவரத்த்தின் படி புதுச்சேரியில் 37 விழுக்காடு வாக்குப்பதிவும்., தஞ்சாவூரில் 39.12 விழுக்காடு வாக்குப்பதிவும்., திருவள்ளூரில் 40.2 விழுக்காடு வாக்குப்பதிவும்., அரக்கோணத்தில் 40.05 விழுக்காடு வாக்குப்பதிவும்., திருவண்ணாமலையில் 39.3  விழுக்காடு வாக்குப்பதிவும்., மத்திய சென்னையை பொறுத்த அளவு 36.9 விழுக்காடு வாக்குப்பதிவும்., நாமக்கல்லில் 41.56 விழுக்காடு வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது. 

அதனைப்போன்று கோயம்புத்தூரில் 39.95 விழுக்காடு வாக்குப்பதிவும்., பொள்ளாச்சியில் 44.04 விழுக்காடு வாக்குப்பதிவும்., கரூரில் 40.63 விழுக்காடு வாக்குப்பதிவும்., கன்னியாகுமரியில் 38.20 விழுக்காடு வாக்குப்பதிவும்., விருதுநகரில் 39.27 விழுக்காடு வாக்குப்பதிவும்.,, கள்ளக்குறிச்சியில் 41.7 விழுக்காடு வாக்குப்பதிவும்., வடசென்னையில் 37.23 விழுக்காடு வாக்குப்பதிவும்., தென்சென்னையில் 37.96 விழுக்காடு வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது. 

சித்திரை திருநாள் கொண்டாட்டம் நடைபெற்று வரும் மதுரையில் 37.4 விழுக்காடு வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்று வரும் தொகுதியை பொருத்தளவில் மொத்தமாக 18 தொகுதிகளில் சேர்த்து 42.82 விழுக்காடு அளவிற்கு வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tamilnadu voting percentage report till 1 pm announced by election chief


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->