திருமணம் முடிந்த கையோடு ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புதுமண தம்பதிகள்.!! வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்ற அதிகாரிகள்.!!
in selam a new married couple giving vote for Parliament election
இந்தியாவிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள் ஒத்துப்போக கூடிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தீவிர பிரச்சாரத்திலும்., வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நிறைவு பெற்ற நிலையில்., இன்று தேர்தல் வாக்குபதிவிற்கான நாள் ஆகும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை தொகுதியில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 840 நபர்கள் வேட்பாளர்களாகவும்., 18 தொகுதிக்குகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமார் 277 நபர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டு., காலை சுமார் 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கப்பட்டு மாலை சுமார் 6 மணிவரை வாக்குப்பதிவானது நடைபெறும். வாக்குசாவடி மையத்திற்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையில் ஈடுபட காவல் துறையினர் மற்றும் துணை இராணுவ படையினர் என்று பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
காலை முதலாகவே மக்கள்., இளைஞர்கள்., திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்களின் வாக்குகளை வரிசையில் காத்திருந்து செலுத்தி வரும் நிலையில்., திருமணம் முடிந்த பின்னர் புதுமண தம்பதியர் தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி கிராமத்தை சார்ந்த நபர் திருமணம் முடிந்த கையோடு தனது மனைவியுடன் வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். திருமணம் முடிந்த நிலையில் வாக்குகளை செலுத்த வந்த அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
English Summary
in selam a new married couple giving vote for Parliament election