சனாதன தர்மம் வேரறுப்பு.,ஸ்டாலினும், திருமாவும் தான் ராமலிங்கம் கொலைக்கு காரணம்!! போட்டுடைத்த எச் ராஜா!!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவரை முஸ்லீம் மதத்தை சேர்ந்த சில சமூக விரோதிகள் மதமாற்றத்தை எதிர்த்ததற்காக கொலை செய்துள்ளனர். 

இன்று அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா," அவரது கொலைக்கு வேறு காரணங்கள் இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவிற்கு எதுவுமில்லை. 

மதமாற்ற கும்பலை எதிர்த்த 10 மணி நேரத்திற்குள்ளாக அவர் கொல்லப்பட்டுள்ளார். பகல் 12 மணிக்கு அவர் மதமாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். ஆனால், இரவு 10-12 மணிக்குள் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

இதில் எதையாவது சொல்லி திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். அனைத்து சமுதாய தலைவர்களும் ஒன்று சொல்கிறேன்,' இந்த நாட்டில் மதச்சார்பின்மை என்பது இந்து மக்களை அழிப்பதற்காக மட்டுமே கொண்டுவரப்பட்டது. 

இதேபோல்தான் திருமாவளவன் திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு என்ற பெயரில் 'சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம்' என ஸ்டாலினுடன் இணைந்து பேசினார். அந்த வார்த்தையின் வடிவமாகவே இந்த கொலையை நான் பார்க்கிறேன்.

காரணம், இக்கொலையை பற்றி இதுவரை ஸ்டாலின் எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்கவில்லை. இதே போல் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டால் தி மு க ஸ்டாலின் அல்லது திருமாவளவன் அல்லது சீமான் இப்படி அமைதியாக இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.

சனாதன தர்மத்தை வேறருக்க, ராமலிங்கம் போன்றோரை வேரறுக்க துவங்கிவிட்டார்கள் அதன் செயல்பாடு தான் இது என நான் கருதுகிறேன்" இவ்வாறு மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hraja says stalin and thiruma are reason for ramalingam murder


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->