சட்டம் தெரியாத முக ஸ்டாலினை ரிமாண்ட் செய்யுங்கள்..! கடுப்பான எச் ராஜா..!!
சட்டம் தெரியாத முக ஸ்டாலினை ரிமாண்ட் செய்யுங்கள்..! கடுப்பான எச் ராஜா..!!
நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதற்காக தி.மு.க எம்.எல்.ஏ உள்பட 300-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் சென்னை சைதாப்பேட்டையில் போராட்டம் செய்த அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று நாமக்கல் சென்றார். அப்போது அங்கு ஒன்று கூடிய தி.மு.க எம்.எல்.ஏ உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கோடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார், 192 தி.மு.க.வினர் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 15 நாட்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து, இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் திமுகவின் இந்த கைது மட்டும் கறுப்புக்கொடி போராட்டம் குறித்தும் பாஜகவின் எச் ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில் முக ஸ்டாலினை தாக்கி கருது ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ''ஒரு எதிர்கட்சி தலைவருக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 124 தெளிவாக கூறுகிறது ஜனாதிபதி/ஆளுனரின் மரியாதைக்கு குந்தகம் ஏற்படுத்த நினைத்தால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உண்டு. நாமக்கல் காவல்துறை செயல் சட்டப்படி சரி'' என்றும்.
''காலையில் கைது செய்து கல்யாண மண்டபத்தில் A/C ல் வைத்து விடுதலை செய்வதை விட்டு விட்டு ஒருமுறை இவரையும் நாமக்கல் திமுக வினரை போல் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்.'' என்றும், பதிவிட்டுள்ளார்.
English Summary
h raja tweet about mk stalin protest