#BREAKING நிர்மலா தேவி வழக்கில் திடீர் திருப்பம்.! சற்றுமுன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயற்சித்ததன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்துகொண்டு இருக்கிறது. 

இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கல்லூரியின் பேராசிரியர்கள் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த பிரச்சனை தொடர்பான வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த பிரச்சனை குறித்த வழக்கானது (29.01.2019) விசாரணைக்கு வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட முவரும் பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு சமர்பிக்கப்பட்டனர்.  

இதற்கிடையே, தனக்கு பலமுறை ஜாமீன் வேண்டும் என்று மனு அளித்து இருந்தார். இந்த மனு மீதான ஒவ்வொரு விசாரணையின் போதும், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், நிர்மலா தேவியை இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறையில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு நேற்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 

பேராசிரியை நிர்மலாதேவி க்கு 6 முறை ஜாதகம் நிராகரிக்கப்பட்ட நிலையில் சற்று முன் ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும், இந்த ஜாமில் நிர்மலாதேவி அவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஜாமீன் காலத்தில் அவர் எந்த செய்தியாளர்களையும் சந்திக்கக்கூடாது இந்த பேட்டியும் அளிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி 11 மாதங்களுக்கு பின் இன்று ஜாமீன் கிடைத்து வெளிவருகிறார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GAIL IN NIRMALA DEVI


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->