வெடித்தது விவசாயிகள் போராட்டம்!! 5 நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம்! விழித்துக்கொள்ளுமா அரசு!! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே விவசாய விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பென்னாகரம் அடுத்த எட்டியாம்பட்டி கிராமத்தில் விவசாய விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைத்து வருகின்றனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கடந்த 9 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு கண்டுகொள்ளாததால், கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றார். பலர் தொடர்ந்து மயக்கமடைந்து வருகின்றனர். இருந்த போதிலும், தங்களது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இன்று நடைபெற்று வரும் 5-வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் 3 பெண்கள் உட்பட 35 விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

விவசாயமே அழியும் தருவாயில் உள்ள நிலையில் தமிழக அரசு ஏன், விவசாயத்தை நசுக்க துணை போகிறது.  8 வழி சாலை, ஹைட்ரோகார்பன் திட்டம், NLC , ஸ்டெர்லைட் உள்ளிட்டவை விவசாய நிலங்களை பாழாக்கும். இதை கருத்தில் கொண்டு இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை, அரசு தானாக முன் வந்து பாதுகாக்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Protest 5 th Days Dharumapuri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->