#BREAKING_NEWS இலங்கை சிறையில் 47 படகுகள் உட்பட 8 தமிழக மீனவர்கள் விடுதலை!!
FISHERMAN RELEASED FROM SRI LANKA
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடந்த 5 ம் தேதி, மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை மீறி மீன் பிடித்தனர், என்று கூறி இலங்கை அரசு கைது செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
அதே பகுதியில் இருந்து மீண்டும் கடந்த 7-ந் தேதி கடலுக்கு சென்றவர்க்ளையும், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இருந்தனர். நேற்று அந்த 8 மீனவர்களும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டு 8 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், படகுகளின் உரிமையாளர்கள் 28-ந் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் சில நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பத்த நிலையில், நேற்று 16 பேர் சென்னை திரும்பினர். இன்னிலையில், 47 படகுகள் உட்பட, மேலும் 8 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வாகும்.
வரவேற்கத்தக்க இந்த மாற்றம் இரு தரப்பு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிக்க அனுமதிப்பதில் முடிய வேண்டும் என்பது மக்களது எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
FISHERMAN RELEASED FROM SRI LANKA