சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை..தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நாடும் முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், நாளை மாலை உடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.

இதனால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டியின் நிலவுகிறது. தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரச்சாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தால் இரண்டு ஆண்டுகள் சிறை என தேர்தல் தலைமை அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Finish propaganda no more social media prapaganda


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->