தாக்குதலில் மரணமடைந்தவரின் தந்தை மற்றொரு மகனையும் இராணுவத்திற்கு அனுப்ப தயார் என கூறி கதறல்!!
father says ready to send her another son for army
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ரதன் தாக்கூரின் தந்தை தனது மற்றொரு மகனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன் என கண்ணீருடன் கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று திட்டமிட்டு நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலில் 5 வீரர்கள் பலியாகினர்.இந்நிலையில், தாக்குதலில் பலியான ரத்தன் தாக்கூர் என்பவரின் தந்தை, "புல்வாமா தாக்குதல் நெஞ்சைப் பிளக்கும் செய்தி.
இருப்பினும், இந்த தேசத்திற்காக நான் என்னுடைய அடுத்த மகனையும் ராணுவத்துக்கு அனுப்ப தயாராக உள்ளேன். பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
தற்கொலைப்படை தாக்குதலில் 45 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். தனது ஒரு மகனை இழந்த சோகமே இன்னும் மறையாத நிலையில் அடுத்த மகனையும் இராணுவத்திற்கு அனுப்ப தயார் என கூறியிருப்பது அனைவரின் மனங்களையும் அசைத்து பார்த்துள்ளது.
English Summary
father says ready to send her another son for army