ஜெ.,வை ஏமாற்றி வெற்றி பெற்றார் தினகரன் : அதிரடியை கிளப்பிய எடப்பாடி! - Seithipunal
Seithipunal


ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரானால் எதுவும் சாதிக்க முடியாது என்று மறைமுகமாக எச்சரித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக அமைச்சர்கள்,நிர்வாகிகள் கண்காணித்து வந்தனர். 

இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் உட்பட பல்வேறு அமைச்சர்களும் கலந்து கொண்டனர். 

அப்போது விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி கூறுகையில்,

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றி கொள்ளையடித்து குவித்த பணத்தை ஆர்.கே.நகரில் வாரி இறைத்து தான் குறுக்கு வழியில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுள்ளார். 

தி.மு.கவும், டி.டி.வி.தினகரனும் கூட்டு சேர்ந்து சதி வேலையில் ஈடுபட்டு தான் ஆர்.கே.நகரில்  வெற்றி பெற்றார். 

அதிமுக ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்ற டி.டி.வி.தினகரனின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றும், சுயேட்சை வேட்பாளரால் எதுவும் சாதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, இன்னும் மூன்று மாதங்களில் எடப்பாடியின் ஆட்சியை கலைத்து வீட்டிற்கு அனுப்புவோம் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi slams dinakaran


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->