"புதிய உச்சங்களைத் தொட்டிருக்க வேண்டியவர்" பேரிழப்பு - டாக்டர் ராமதாஸ் இரங்கல்!
dr ramadoss mourning to parikkar demise
பாஜகவின் முக்கிய தலைவரும், கோவா மாநிலத்தின் முதல் அமைச்சருமான திரு மனோகர் பாரிக்கர் சற்றுமுன் காலமானார். தற்போதைய மோடி அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர். அவர் கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்போது முதலமைச்சராக செயல்படுவதற்காக, மத்திய அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டு, கோவா மாநில அரசியலுக்கு சென்றார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சையை எடுத்து வந்த நிலையில் மனோகர் பாரிக்கர் உடல்நிலை முடியாத நிலையிலும் தன்னுடைய பணியை செய்து வந்தார். இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்து என முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்த நிலையில் சற்று முன் அவர் மறைந்தார். என்ற செய்தி வெளியானது. இது பாஜகவினரை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சியை, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 63 .
avarஇன் மறைவிற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் இரங்கல் பதிவில், "கோவா முதலமைச்சரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான மனோகர் பாரிக்கரின் மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மிகவும் திறமையான, மக்களால் விரும்பப்பட்ட தலைவர். நீண்ட காலம் வாழ்ந்து, புதிய உச்சங்களைத் தொட்டிருக்க வேண்டியவர். அவரின் மறைவு கோவாவுக்கு பேரிழப்பு!" என கூறியுள்ளார்.
English Summary
dr ramadoss mourning to parikkar demise