திமுக பிரமுகர் அலுவலகம் புகுந்து வெட்டிக்கொலை.!! வெளியான அதிர்ச்சி காரணம்.!!
DMK PERSOL MURDER IN SRI PERAMPATHUR
ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரை அவரின் அலுவலகத்தில் புகுந்த சில மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது45). பழைய கார் வாங்கி விற்பது, கம்பெனி, தொழிற்சாலைகளில் கழிவுகளை வாங்கி விற்பது போன்ற தொழில்களை ரமேஷ் செய்து வருகிறார். மேலும், ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு சங்க இயக்குனராகவும், பிள்ளைப்பாக்கம் திமுக ஊராட்சி செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மதியம் ஸ்ரீபெரும்புதூர்- குன்றத்தூர் சாலையில் அமைந்துள்ள ரமேஷ் அலுவலகத்தில் அலுவலக பணியை செய்து கொண்டிருக்கும் போது, மூன்று ஆட்டோகாளில் வந்த மர்ம கும்பல் ரமேசை வெட்டிக் கொலை தப்பி ஓடிவிட்டது. மர்ம கும்மபாலின் இந்த தாக்குதலில் ரமேஷ் பலியானார். அவரின் அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர் பார்த்திபனுக்கும் கையில் வெட்டு விழுந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார், கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, ரமேஷ் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
சென்னை மற்றும் அதனை சிற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலையில் பழைய பொருட்களை எடுப்பது தொடர்பாக ரமேஷ் அவர்களுக்கும், ஒரு சிலருக்கும் இடையே சமீபத்தில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கொலை செய்யப்பட்டு இருக்க கூடுமா என்று போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
English Summary
DMK PERSOL MURDER IN SRI PERAMPATHUR