பெண் என்றும் கூட பாராமல் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்த தி.மு.க - உண்மையை மறைந்து இன்று ஆடி வரும் நாடகம்..!
dmk murdered women on road
தி.மு.க. எங்களைப் பார்த்து மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறி வருகிறார்கள்.
இதே தி.மு.க.வும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு அக்கட்சியின் மந்திரிசபையில் தி.மு.க. இடம் பெற்றிருந்தது.
இவர்கள் கூட்டணி வைத்தால் நல்ல கூட்டணி. நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? இது என்ன நியாயம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வியெழுப்பி உள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், அதிமுக அரசு சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரசாக உள்ளது. ஆண்டு தோறும் ஹஜ் புனித யாத்திரை செல்ல நிதி உதவி வழங்கி வருகிறது.
அதேபோல் கிறிஸ்தவ மக்களுக்கு புனித ஜெருசலேம் செல்ல ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கி வருகிறது. புனித ரமலான் நோன்பிற்கு 4500 மெட்ரிக் டன் அரிசி வழங்கிய ஒரே அரசு அம்மாவின் அரசு தான்.
இந்த ஆட்சியை கலைக்க தினம் தினம் ஒரு போராட்டத்தை ஸ்டாலின் தூண்டி விடுகிறார். நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டங்களை எங்களுக்கு எதிராக நடத்தியுள்ளனர். அதையெல்லாம் நாங்கள் தகர்த்தெறிந்து இன்றைக்கு சிறப்பாக மக்கள் பணியாற்றி வருகிறோம்.
மதுரையில் 1997-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த லீலாவதி என்ற பெண் தி.மு.க.வின் அராஜகத்தை தட்டிக்கேட்டார். அவரை பெண் என்றும் கூட பாராமல் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்தனர்.
கொலை செய்த தி.மு.க. பிரமுகரின் சகோதரருடன் இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் கைகோர்த்துள்ளார். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
dmk murdered women on road