நான் தாத்தா இல்லை., மாமா.!! முக ஸ்டாலின் அதிரடி.!! திமுக கிராம சபை கூட்டத்தில் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர். அந்தந்த அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. 

தமிழகத்திலும் வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி செயல்பாடுகள்., தொடர் கூட்டங்கள் போன்று நடத்தி மக்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில்., தமிழகத்தின் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் மூலமாக கிராம சபை கூட்டமானது அந்தந்த கிராம புறங்களில் நடைபெற்று வருகிறது. 

தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த கூட்டமானது அனைத்து ஊராட்சிகளில், திமுக கிராம சபை கூட்டத்தை நடத்தி., மாவட்ட வாரியாக சில ஊராட்சி மன்ற கூட்டத்தில் ஸ்டாலினும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மக்களிடம் கருத்து மற்றும் குறைகளை கேட்டறிந்து வருகிறார். 

அந்த வகையில்., விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் சத்திரப்பட்டியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலினிடம் அங்குள்ள சிறுமி ஒருவர் "ஸ்டாலின் தாத்தா வணக்கம்" என்று கூறவே., இதனை கேட்ட ஸ்டாலின் "நான் தாத்தா இல்லை., மாமா" என்று நகைச்சுவையுடன் கூறவே., அங்குள்ளவர்களுடன் சிறிது மகிழ்ந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk kirama sapa meeting speech in viruthunagar district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->