தமிழ் மானம் காப்பாற்ற, இந்தியில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின்.! தேர்தலுக்கு முன்பே வெளியான திமுகவின் உண்மை முகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

திமுகவின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் சுத்தமாக எடுபடவில்லை. ஆகையால் திமுக வேறு வழியை கையாண்டு உள்ளது.

மக்கள் மத்தியில் பிரசாரம் எடுபடாததால் ஊடகம் வாயிலாக பிரச்சாரம் செய்ய திமுக முடிவு செய்துள்ளது. அதன்படி மக்களின் பிரச்சனைகளாக கருதப்படும் விலைவாசி உயர்வு, நீட் தேர்வு ஆகியவற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது.

ஊடக பிரசாரத்தில் தமிழ் மானம் காப்போம், தமிழகத்தை மீட்டுப்போம் என்று ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். வடசென்னை திமுக வேட்பாளர் ஆதரித்து இந்தியில் சுவர் ஓட்டிகள் மற்றும் துண்டு சிட்டுகள் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்துவருகிறார். ஊடகத்தில் தமிழ் மனம் காப்போம் என்று பிரச்சாரம், வடசென்னை மற்றும் திண்டுக்கல் தொகுதியில் இந்தியில் பிரச்சாரம் செய்துவருகிறார். ஸ்டாலினா தமிழில் மானம் காப்பாற்ற போகிறார்? என்று மக்கள் கூறிவருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk election campaign in hindi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->