திடீர் சந்திப்பு! திமுக மாவட்ட செயலாளர் வீட்டில் அதிமுக பிரபலம்! - Seithipunal
Seithipunal


திமுகவின் முன்னாள் அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராகவும் இருப்பவர் முத்துசாமி அண்மையில் இவருடைய மனைவி முத்துலட்சுமி மரணமடைந்தார்.

அவரின் மறைவையொட்டி  முத்துசாமிக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் நேரில் வந்து அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் இன்று ஈரோடு வந்த தமிழக சபாநாயகர் தனபால், தி.மு.க. மாவட்ட செயலாளர் முத்துசாமி வீட்டுக்கு நேராக ஈரோடு பெரியார் நகருக்கு சென்றார்.

அப்போது வீட்டிலிருந்த முத்துசாமி சபாநாயகர் தனபாலை வரவேற்றார். முத்துசாமிக்கு  மனைவி இறந்ததையொட்டி சபாநாயகர் தனபால் ஆறுதல் கூறினார். மேலும் இருவரும் 30 நிமிடம் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். 

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர், “நான்  நண்பர் முத்துசாமியின்  மனைவி மறைவு குறித்து ஆறுதல் கூற வந்தேன். அவரை சந்தித்து ஆறுதலும் கூறிவிட்டேன்.. வேறொன்றும்  சொல்லும்படியில்லை என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

இந்த சந்திப்பின்போது எதிரும் புதிருமாக உள்ள அ.தி.மு.க-தி.மு.க பிரமுகர்களும் சந்தித்து பரஸ்பரம் நட்பை பரிமாறிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா இறந்த பிறகு இது போன்ற சந்திப்புகள் அரசியல் நாகரிகத்தை உணர்த்துகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk admk leaders sudden meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->