ஜெயலலிதாவே மேட்டூர் அணையைத் திறக்கவில்லை….! எடப்பாடி ஆட்சியில் தான் திறக்கப் பட்டுள்ளது…..! அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் பகீர்…!
dindigul srinivasan's critical statement
திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது. அதற்கு தலைமை வகித்த, தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது,
“நல்லோர் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை” என்று அவ்வையார் கூறினார். இன்றைக்கு அந்த மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வந்த பிறகு தான் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அனைத்து அணைகளிலும், தண்ணீர் வழி்ந்தோடுகிறது.
ஜெயலலிதா ஆட்சியில் கூட மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. ஆனால், எடப்பாடி ஆட்சியில் தான், மேட்டூர் அணை திறக்கப் பட்டுள்ளது. இதனால் காவரி ஆறு பெருகி, இன்று நம் ஊர்களுக்கு எல்லாம் தண்ணீர் கிடைக்கிறது”
என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதைக் கேட்டு அதிமுக. நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
English Summary
dindigul srinivasan's critical statement