அசந்த நேரத்தில் எங்களை வீழ்த்திய தினகரன் : ஓ.பி.எஸ் அதிரடி! - Seithipunal
Seithipunal


அதிமுக அரசின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஊட்டியில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இந்த விழாவிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேனர்கள் ஒரு புறமும், எம்ஜிஆர், ஜெயலலிதா பேனர்கள் ஒரு புறமும் வைக்கப்பட்டுள்ளன. 

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறும் இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி துணை முதல்வர் ஓ.பி.எஸ் உட்பட பல அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாங்கள் அசந்த நேரத்தில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுள்ளார் என்று குற்றம் சாட்டினார். 

மேலும், ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் எப்படி வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் தமிழக மக்கள் சிந்திக்க தெரிந்தவர்கள் என்றும் கூறினார்.

டி.டி.வி.தினகரன் முதலமைச்சராக சதி திட்டம் தீட்டினார் என்றும் எத்தனை சதி திட்டம் தீட்டினாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்றும் கூறினார்.

அதிமுகவுக்கு துரோகம் செய்ததால் தான் சசிகலா குடும்பத்தை சேர்ந்த 16 பேரை ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கினார். இவ்வாறு துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dinakaran plan to next cm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->