அமமுகவில் அதிரடி மாற்றம்.! இனி சசிகலா இல்லையா? தினகரன் தானா? ஆடிப்போன அமமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


அம்மா முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்ய செய்வது தொடர்பாக டிடிவி தினகரன் தலைமையிலான மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 

இது வரை அமைப்பாக இருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக சசிகலா இருந்து வந்தார். துணைப் பொதுச் செயலாளராக தினகரன் பதவி வகித்து வந்தார். 

அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அமமுகவுக்கு சசிகலாவின் பெயரை முன்னிருத்தவில்லை. அதற்கு பதிலாக துணைப் பொதுச் செயலாளராக இருந்த டிடிவி தினகரன் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று உள்ளார். 

நேற்று நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் ஒரு குழுவாக பரிசு பெற்று சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டனர். அடுத்து வரும் மே மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ள 4 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியைப் பதிவு செய்ய டிடிவி தினகரன் தலைமையிலான குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dinakaran new plan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->