தினகரன் தலைக்கு மேல் நின்ற கத்தியை இறக்கி வைத்த நீதிமன்றம்! பரபரப்பு உத்தரவு! உற்சாகத்தில் தினகரன் தரப்பு!
DINAKARAN FERA CASE
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனின் அரசியல் வாழ்க்கைக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கு. இந்த வழக்கினை விசாரிக்க தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கினை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நடைபெற்று வரும் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் தினகரன் தரப்பில் கேட்கப்படும் அனைத்து ஆவணங்களையும் தினகரனுக்கு வழங்க வேண்டுமென அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்புடன், வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க தினகரனுக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இது தினகரன் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுகருத்தில்லை.