ராகுல் காந்தி வருக!! நிலையான ஆட்சி தருக!! ஸ்டாலினை போல் மிமிக்ரி செய்த தினகரன்!! சிரித்த செய்தியாளர்கள்!!
ராகுல் காந்தி வருக!! நிலையான ஆட்சி தருக!! ஸ்டாலினை போல் மிமிக்ரி செய்த தினகரன்!! சிரிப்பலையில் செய்தியாளர்கள்!!
நேற்று, திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த, அமமுகவின் துணை பொதுச்செயலாளர், டிடிவி தினகரன், அதிரடியாக பேட்டியளித்துள்ளார். ''அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த காலத்திலும் அதிமுக உடன் இணையாது, அவ்வாறு அதிமுகவுடன் இணைவது அமமுக தனக்கு தானே செய்யும் தற்கொலை முயற்சியாக இருக்கும்.
அமமுகவின் வளர்ச்சியை பிடிக்காமல் அதிமுக - அமமுக இணைய உள்ளதாக வதந்தி பரப்பப்படுகிறது'' என்று தெரிவித்தார். மேலும், " ஸ்டாலின், ' ராகுல் காந்தியே வருக!! நிலையான ஆட்சி தருக!!' என திமுக தலைவர் ஸ்டாலின் போல மெமிக்கிரி செய்து காட்டி, "இவ்வாறு முக ஸ்டாலின் பாஜகவுக்கு உதவி செய்யும் நோக்கில், பிரதமராக ராகுலை முன்மொழிந்தாரோ" என சந்தேகம் இருக்கிறது என்றார். இது செய்தியாளர்கள் மற்றும் தொண்டர்களிடையே பயங்கரமான சிரிப்பலையை உருவாக்கியது.
இதனை தொடர்ந்து, " கடந்த தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட் இழக்க காரணம், திமுக தான். தமிழக நலனை பாதுகாக்க, இங்குள்ள மாநிலகட்சிகள் வலுவானால்தான் முடியும்.ஒருசில மாநிலக்கட்சிகளோடு பேசிக்கொண்டிருக்கிறேன். கூட்டணி அமைப்பேன்'' என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சில நாட்களாக தினகரன் பற்றி பொய்யான வதந்திகளை பரப்பி, அவரின் வளர்ச்சியை தடுக்க நினைத்தவர்களுக்கு இந்த பேட்டியின் மூலம் நல்ல பதிலடி கொடுத்துள்ளார். இந்த பேட்டிக்கு பிறகு அமமுக தொண்டர்கள் மேலும் உற்சாகத்துடன் செயல்பட தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
dhinakaran trolls dmk stalin