விஜயதரணி MLA கைது! கன்னியாகுமரியில் மக்கள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரசை சேர்ந்த விஜயதாரணி உள்ளார். இந்த தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் குண்டும், குழியுமாக சாலைகள் காணபடுவதால் அதனை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று கன்னியாகுமாரி மாவட்டம் குழித்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து இருந்தனர். 

கூறியபடி, இன்று குழித்துறையில்  காங்கிரசார் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ. வுமான ராஜேஷ்குமார்  தொடங்கிவைத்தார். மறியல் போராட்டத்தில் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வான விஜயதரணியும் கலந்து கொண்டார். 

சாலை மறியல் போராட்டத்தால் குழித்துறை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், விஜயதரணி உள்ளிட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress MLa vijayadharani arrested in kanyakumari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->