எப்போ 15 லட்சம் தருவாங்க? அப்பாவியாய் கேட்கும் பா.ஜ.க. தொண்டர்கள்….! - Seithipunal
Seithipunal


 

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கோட்டையாக இருந்த தனது ஆட்சியை பா.ஜ.க. இழந்துள்ளது. இதனுடன் சேர்த்து மொத்தமாக நடைபெற்ற, ஐந்து மாநிலத்தின் சட்டசபைத் தேர்தலில், அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்துள்ளது, பா.ஜ.க. தவிர, வாக்குகள் சதவீதத்திலும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த தோல்வியை, பா.ஜ.க. தொண்டர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளனர். இந்த தோல்வியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அடுத்து நடைபெற உள்ள, பாராளுமன்றத் தேர்தலில், நாங்கள் இன்னும் கூடுதலாகப் பணியாற்றி, பா.ஜ.க.-விற்கு வெற்றிக் கனியைத் தருவோம், என்றும் கூறுகின்றனர்.

ஆனால், பல கிராமங்களில் உள்ள, பா.ஜ.க. தொண்டர்களிடம் இன்னும் ஒரு கேள்வி எழுந்து வருகிறது. அது, “எப்பங்க, நமக்கெல்லாம், 15 லட்ச ரூபாய் தரப் போறாங்க, பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னால் குடுத்துடுவாங்களா?” என்ற அளவிற்கு, அவர்களின் கேள்விகள் இருப்பதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP team members questioned


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->