தமிழிசை பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பாஜகவினர் ஆவேசம்!.
பாஜகவினர் ஆவேசம்
புதுக்கோட்டையில் இன்று தமிழிசையை வரவேற்று புதிய பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் பேனர் வைத்துள்ளனர்.வரிசையாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டிருந்தன.
பாஜகவினர் பேனர்கள் கிழிக்கப்பட்டதையொட்டி காவல்துறையில் தெரிவித்தனர். காவல்துறையினர் குற்றவாளியை தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டையில் ஹெச்.ராஜா சர்ச்சைக்கு பிறகு நிறைய கலவரங்கள் நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலையை சேதப்படுத்தி பெரும் சர்ச்சைக்கு உண்டானது. சிலையை சேதப்படுத்தியவரை கைது செய்து விசாரித்தபோது பாக்சிங் செய்ய தோன்றியதால் பெரியார் சிலையை சேதப்படுத்தினேன் என்று கூறியது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் தமிழிசை சௌந்தராஜனின் பேனர்கள் கிழிக்கப்பட்டதை பாஜகவினர் ஆத்திரத்துக்கு உள்ளார்கள். இந்த சம்பவம் புதுக்கோட்டை பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
bjp supporters angry for thamilisai banner damaged