பாஜகவுடன் கூட்டணி வைக்க, தென் மாநிலங்களில் யாரும் தயாராக இல்லை - முதல்வர் பரபரப்பு பேட்டி!!  - Seithipunal
Seithipunal


வருகிற மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தேசிய கட்சிகள் உள்பட மாநில கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. மத்தியில் அடுத்து பாஜக தலைமையிலான ஆட்சியா?, இல்லை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியா? என்ற விவாதம் அனைத்து இடத்திலும் சூடு பிடித்து இருக்கிறது. 

Image result for மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது

இந்நிலையில், வருகிற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க,  தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் யாரும் தயாராக இல்லை என  புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

                                           

சென்னை விமான நிலையத்தில் புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த போட்டியில், எதிர்கட்சிகள் சார்பில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டம் வெற்றி பெறும் என நம்புகிறேன். மேலும், வருகிற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க, தென் மாநிலங்களில் யாரும் தயாராக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP No Alliance South Parties


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->