மோடிக்கு எதிராக பேசினால் கைகளை துண்டிப்போம்.! சர்ச்சையை கிளப்பிய பாஜக தலைவர்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. அதில் மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டது. இன்னும் நான்கு கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் சத்பால் சிங் சத்தி பேசிய பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் மாண்டி என்னுமிடத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

அப்போது அவர் பேசியவை, பிரதமர் மோடியையும், பாஜக தலைவர்களையும் எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கைகள் துண்டிப்போம் என்று சத்பால் சிங் சத்தி பேசினார். அவரது இந்த பேச்சு கடும் விமர்சனைத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் முன்னதாக ஏற்கனவே காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்  கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp leader says about cut hands


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->