பாஜகவை கழட்டிவிடும் அதிமுக.?! பாஜக தொடுத்த கடைசி அம்பு.!! தாக்குமா? தப்புமா?!! - Seithipunal
Seithipunal


வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்திய அரசியல் களமே சூடு பிடித்து உள்ளது. தமிழகத்தில் கேட்கவே வேண்டாம் அனல் பறக்க கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. ஆளும் பாஜக கட்சி தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வருகிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வலுவான கூட்டணியை அமைக்க பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் பிரதமர் மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். மேலும், மத்திய அமைச்சர் பியூஸ்கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காகவும் கடந்த 14 ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விமானம் மூலம் கோவை வந்தார். மேலும் ஆண்டு இரவே மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களும் சென்னை வைத்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் மும்பையில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்யவே இந்தப்பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ''மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களுடன் அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், மத்திய மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தே இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்து இருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மத்திய அமைச்சர் சென்னை விமான நிலையத்திலேயே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தான் வந்ததாக கூறிய பின்பும், இல்லவே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருப்பது அதிமுக-பாஜக கூட்டணி உடன்படவில்லை என்றே தெரிகிறது. இதனால் தான் பாஜக தலைவரும், மத்திய மந்திரியும் நடையை நடந்து வருகின்றனர் போல, 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP LEADER COME TO CHENNAI ADMK BJP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->