முதல்வரிடம் கஞ்சா கொடுக்க முயன்ற முக்கிய புள்ளி.. விமான நிலையத்தில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இன்று கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். கோடைகாலம் தொடங்கியுள்ளதன் காரணமாக பொதுமக்கள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் தமிழக முதலமைச்ச மு க ஸ்டாலினும் கொடைக்கானல் சென்றுள்ளார். 

இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற முதல்வரிடம் விமான நிலையத்தில் பாஜக நிர்வாகி கஞ்சாவுடன் மனு கொடுக்க‌ முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக செயற்குழு உறுப்பினர் சங்கரபாண்டியை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP executive trying to give petition to MKStalin with ganja


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->