இந்தியாவின் முதல் பெண் கட்சியின் நிர்வாகியாக பிக்பாஸ் பிரபலம்!! அடுத்தடுத்த வாய்ப்புகளால் திணறும் நடிகை!!
bigboss nithya in national womens party
முழுவதும் பெண்களின் நலனுக்காக மட்டுமே தொடங்கப்பட்ட தேசிய பெண்கள் கட்சி இந்தியாவின் முதல் பெண் கட்சியாகும். இது மருத்துவர் ஸ்வேதா ஷெட்டியால் சில நாட்களுக்கு முன்னதாக துவங்கப்பட்டது.
இந்நிலையில், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இடம்பெற்று பிரபலமான நித்யா, தற்பொழுது தேசிய பெண்கள் கட்சியின் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார். "நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும்" என்று இக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சினிமா நடிகரான தாடி பாலாஜியின் மனைவி தான் இந்த நித்யா இருவரும் சில காரணங்களுக்காக பிரிந்து வாழ்ந்த போதும், பிக்பாஸ் நிகழ்சியில் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பிக்பாஸின் மூலம் பிரபலமான நடிகை நித்தியா தற்பொழுது அரசியலில் இறங்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் அந்த கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இதனை அடுத்து நித்யா தமழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
English Summary
bigboss nithya in national womens party