இப்படி செய்தல் நாடு எப்படி முன்னேறும் - அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்.!
Arvind Kejriwal strongly condemned
மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக சி.பி.ஐ அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீசை பிறப்பித்துள்ளனர். இதற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,
"மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக சி.பி.ஐ அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது கண்டனத்துக்குரியது. நாடு முழுவதும் பணவீக்கம் காரணமாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து பணவீக்கம் மற்றும் வேலையின்மையை குறைக்க போராட வேண்டும்.
ஆனால் மத்திய அரசு காலையில் எழுந்தவுடன் சி.பி.ஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் மூலம் எதிர்க்கட்சிகளை முடக்குகிறது. இந்த நிலையில் நாடு எப்படி முன்னேறும்". என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Arvind Kejriwal strongly condemned