ரஜினி எந்த பேட்டைக்கு போனாலும் மக்களின் 'விஸ்வாசம்' வேணும்! ரஜினியை சீண்டும் அப்ஸரா ரெட்டி!
Apsara Reddy Makes Comment in Rajini
ரஜினிகாந்த் பற்றி மகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளர் அப்ஸரா ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் எந்த பேட்டைக்கு போனாலும், மக்களில் விஸ்வாசத்தை பெற்றால் மட்டுமே வாக்குகளை பெற முடியாது என கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளரும், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளருமான திருநங்கை அப்ஸரா ரெட்டி, அண்மையில் மகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் தேசிய அளவில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை ஆகும்.
அதை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்ஸரா ரெட்டி, மோடி அரசில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் 4 மடங்கு அதிகரித்துவிட்டது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது. கிராமப்புற பெண்களின் வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் மோடி அரசு எடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் ரஜினியை ஏஜென்ட் ஆக வைத்து பாஜக ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். நடிகர் ரஜினி எந்த பேட்டைக்கு போனாலும் மக்களின் விஸ்வாசம் இல்லாமல் வாக்குகளை பெற முடியாது எனவும் அப்ஸரா ரெட்டி கூறினார்.
English Summary
Apsara Reddy Makes Comment in Rajini