பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம்.! திடீர் மாற்றம்... புதிய பதவி ஏற்றார் டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


அம்மா முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்ய செய்வது தொடர்பாக டிடிவி தினகரன் தலைமையிலான மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இது வரை அமைப்பாக இருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக சசிகலா இருந்து வந்தார். துணைப் பொதுச் செயலாளராக தினகரன் பதவி வகித்து வந்தார். 

அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அமமுகவுக்கு சசிகலாவின் பெயரை முன்னிருத்தவில்லை. அதற்கு பதிலாக துணைப் பொதுச் செயலாளராக இருந்த டிடிவி தினகரன் அமமுக பொதுச்செயலாளர் ஆனார். அமமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றார் தினகரன். சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஒருமனதாக தேர்வானார்.

நேற்று நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் ஒரு குழுவாக பரிசு பெற்று சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டனர். அடுத்து வரும் மே மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ள 4 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியைப் பதிவு செய்ய டிடிவி தினகரன் தலைமையிலான குழுவினர் முடிவு செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk new posting for ttv dinakaran


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->