ஒரு கையில் கட்சி கொடி.! மறு கையில் மது பாட்டில்.!! வைரலாகும் புகைப்படம்.!! தலையில் அடித்து கொள்ளும் தலைவர்.!!  - Seithipunal
Seithipunal


சொந்த வீட்டு சுக, துக்க நிகழ்ச்சிகளுக்கே மது விருந்து வைக்கும் தமிழர்களின் நவ நாகரிக பாரம்பரியத்தில், தேர்தலுக்கு மது விருந்து இல்லாமல் இருக்குமா. மது விலக்கு வேண்டும் என்று போராட்டம் நடத்தவே, சம்மபலமாக மதுவும், பிரியாணியும் வழங்கும் காலமாக மாறிவிட்டது.

இந்த நிலையில், மக்களவை, 18 தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு வரும்  18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் சுனாமியை போல பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் SDPI கட்சியுடன் கூட்டணி வைத்து இந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் ராமசாமியை ஆதரித்து, டிடிவி தினகரன் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். பின்னர் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு அமமுக நிர்வாகிகள் வழக்கம் போல கொடுக்கவேண்டியதை கொடுத்த பின், அமமுக கட்சி கோடி ஒரு கையிலும், மறுகையில் மது பாட்டிலுடனும் பொது இடங்களிலேயே மது அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK ELECTION CAMPAIGN


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->