நரேந்திர மோடி ₹1 கூட ஊழல் செய்யவில்லை.!! - அமித் ஷா பெருமிதம்.!! - Seithipunal
Seithipunal


12 லட்சம் கோடி ஊழல் செய்தது இந்தியா கூட்டணி.!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதிக்கு உட்பட்ட ஐந்து மக்களவைத் தொகுதிகளுக்கான பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மைசூர் அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துஇந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் ‌ 

அப்போது பேசிய அவர் "தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை வீடு வீடாக சென்று தெரிவிக்கும் பணியை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். 

கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும். குஜராத் முதலமைச்சர் ஆக நரேந்திர மோடி இருந்த போதும் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த போதும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும் நானும் 40 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறோம். அவர் ஒரு பைசா கூட ஊழல் செய்ததில்லை. 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை. ஆனால் கோடை காலம் வந்தால் ராகுல் காந்தி வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்கிறார். 

ஊழல் செய்தவர்களை காப்பாற்றவே இந்தியா கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ளன. ஊழல்வாதிகள் மீதான நடவடிக்கை எதிர்காலத்திலும் தொடரும்" என மத்திய அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amitsha Said Narendra Modi not corrupted even single rupee


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->