டெல்லி விரைந்த ஓபிஎஸ் அணியினர்… முடிவை எட்டும் இரட்டை இலை விவகாரம்.. - Seithipunal
Seithipunal


இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த இறுதி விசாரணை இந்திய தேர்தல் ஆணையத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் ஆஜராக பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் முனுசாமி மற்றும் வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி முடிவு நாளை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் வெற்றிபெற அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பெரும் பங்கு வகிக்கும் என்பதால் இந்த விவகாரத்தில் எடப்பாடி தலைமையிலான அணியினர் மிக மும்புரமாக செயல்பட்டு வருகின்றனர். இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என தினகரன் தரப்பு வைத்துள்ள கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாது என்ற பரவலாக பேசப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK symbol issue final hearing tomorrow


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->