#breaking: அதிமுக எம்.எல்.ஏ. மாரடைப்பால் உயிரிழந்தார்.! கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் சார்பில் எம்.எல்.ஏ வாக இருப்பவர் கனகராஜ். இவர் தினமும் இல்லத்தில் செய்தித்தாள் படிப்பது வழக்கம். 

அந்த வகையில்., இன்று காலை வீட்டில் செய்தித்தாள் படித்து கொண்டு இருந்த கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் (வயது 64) நெஞ்சு வலியால் அகால மரணடைந்துள்ளார். 

காலையில் வழக்கம் போல எழுந்து செய்தித்தாள் படித்து கொண்டு இருந்த சமயத்தில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் துடித்துள்ளார். 

இதனை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து சுதாரிப்பதற்குள் பரிதாபமாக மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இவருக்கு இரத்தினம் என்ற மனைவியும்., ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும்., தொகுதி மக்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால் முதல் நபராக வந்து உதவி செய்யும் நபர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார் என்று கண்ணீருடன் அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mla soolur kanagaraj died by heart attack


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->