உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க தோற்றால்?.....திகில் கிளப்பிய அமைச்சர்! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க தோற்றால், ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சி போல் ஆகிவிடுவோம் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

நாமக்கல்லில் நடைபெற்ற விழா ஒன்றில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:

அ.தி.மு.கவை கைப்பாவை பொம்மையாக ஆட்டுவிக்கவும், ஆட்சியை கவிழ்க்கவும் துடிக்கும் டி.டி.வி.தினகரனின் கனவு பலிக்காது என்றும் பதவியை பிடிக்க துடிக்கும் டி.டி.வி.தினகரனுக்கு மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறினார்.

மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அந்த 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் என்று ஆசைவார்த்தை கூறி டி.டி.வி.தினகரன் ஏமாற்றுகிறார் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க தோற்றால், ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சி போல் ஆகிவிடுவோம் என்றும் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்படுவதற்கு காழ்ப்புணர்ச்சியால்தான் ஸ்டாலின் எதிர்க்கிறார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk minister speech is different


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->