அதிமுகவில் இருந்து முக்கிய மூன்று புள்ளிகள் அதிரடி நீக்கம்.!! ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை.!!
admk leaders new order
வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற காரணத்திற்காக, சுயேச்சையாக களமிறங்கியுள்ள அதிமுகவின் செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ''கழகத்தின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுவதோடு, கழக வேட்பாளரையும், கழகத் தலைமையின் மீதும் விமர்சித்துப் பேசி வரும் மார்க்கண்டேயன் (கழகச் செய்தித் தொடர்பாளர்) அவருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றி வரும் தெய்வேந்திரன் மற்றும் சங்கர பாண்டியன் ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு, உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்'' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.