திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒரு கொலைகார கூட்டணி!! அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!! செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


சென்னை, ராயபுரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம், ' அமைச்சரவை கூட்டத்தில் தமிழக மக்களின் நலன்கள் குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறினார். அப்போது செய்தியாளர் ஒருவர், 'அதிமுகவுடன், பாஜக அமைக்க முயற்சிக்கும் கூட்டணி, கொள்கைக் கூட்டணியா அல்லது கொள்ளைக் கூட்டணியா ' என மு.க.ஸ்டாலின் விமர்சித்ததை பற்றி கேட்டார்.

அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுகவுடன் பாஜக அமைக்க முயற்சிக்கும் கூட்டணி கொள்ளைக் கூட்டணி என்றால், திமுக-காங்கிரஸ் கூட்டணியை கொலைகார கூட்டணி என அழைக்கலாமா?" என்று, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

மேலும், முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ்-திமுக கூட்டணி தான் காரணம் இதனை மக்கள் மறக்க மாட்டார்கள் என நம்புகிறோம், என  அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக, சசிகலா, டிடிவி குடும்பத்தினர் தவிர மற்ற அனைவரும் அதிமுக-வுக்கு வந்து விடுவார்கள் என்றும், அதிமுகவும், அமமுகவும் இணையப் போவதாக வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk jeyakumar said against stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->