கூட்டணி முடிவான வேகத்தில்... அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சி!
admk coalition one Party to leave
மக்களவைத் தேர்தலுக்கு யாருடன் கூட்டணி? என்ற அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி. தங்கள் முடிவை பாட்டாளி மக்கள் கட்சி இன்று அறிவித்துள்ளது. இன்று சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் பாமக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்த வேகத்தில் அதிமுக பாமக கூட்டணி உறுதியானது. தற்போது எத்தனை சீட் என்பன உள்ளிட்ட விவரங்கள் வெளிவந்துள்ளது.
இந்த கூட்டணியில் பாமகவிற்கு 7 இடங்கள் எனவும்,ஒரு ராஜ்ய சபா எனவும் உறுதியளித்துள்ளார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் அடுத்து நடைபெற உள்ள 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாமக ஆதரவு அளிக்கும் என கூறப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் 8 தொகுதியில் பாஜக போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. பாமக 7 தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் 8ல் பாஜக போட்டியிட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்த 8 தொகுதியில் பாஜக கூட்டணி கட்சிகளான புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிக்கு ஒரு ஒரு தொகுதி வழங்கப்படும். பாஜக 5 தொகுதிகளில் போட்டியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக-வுக்கு 5 தொகுகள் ஒதுக்க உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தமிழகம் வரும் போது அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில், மனிதநேய ஜனநாயகக் கட்சி, அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. பாஜக இருக்கும் கூட்டணியில் மனிதநேய ஜனநாயகக் கட்சி இடம்பெறாது. பாஜக மக்களுக்கு நலனுக்கு எதிரான கட்சி என்று கூறி அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
English Summary
admk coalition one Party to leave