செல்வம் வீட்டிற்குள் தங்க... நம் வீட்டில் செய்யவே கூடாத சில விஷயங்கள்.!.! - Seithipunal
Seithipunal


என்னதான் நாம் போராடி உழைத்து வந்தாலும் வீட்டிற்கு வருகின்ற மகாலட்சுமியை ஒரு நிமிடத்தில் கரைந்து விடுகிறது. எப்போதுமே பல கஷ்டம் நம் வீட்டில் நிலவும். இதற்கு சில நேரங்களில் பெரிய பரிகாரங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. வீட்டில் ஒரு சில  செயல்களை  தொடர்ந்து செய்து வந்தாலே  செல்வம் தங்கும். அவை என்னென்ன செயல்கள் என்று பார்ப்போம்.

குப்பைத்தொட்டி :

வீட்டில் குப்பைத்தொட்டியை வைத்து பயன்படுத்துவது என்றுமே நல்லதல்ல. அப்படியே குப்பைத் தொட்டியை வைத்து பயன்படுத்த வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டாலும் அதிலிருக்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த பார்க்க வேண்டும். வீட்டின் குப்பைத் தொட்டியில் குப்பைகள் சேர்ந்திருப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

கலைந்து கிடக்கும் பொருட்கள்:

பொதுவாகவே எடுத்த பொருட்களை அந்தந்த இடத்தில் திருப்பி வைப்பதே நல்ல பழக்கம். பொருட்கள் கலைந்து கிடப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நமது அலமாரிலோ அல்லது வீட்டிலோ கலைந்து கிடக்கும் பொருட்களை மறு சீரமைத்து வைப்பது நல்ல பலன்களை கொடுக்கும்.

 

பழைய ஆவணங்கள்:

பழைய ரசீதுகள் வங்கி அறிக்கைகள் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகியவற்றை  வீட்டில் வைத்திருக்கும் போது அவற்றை  தூசி படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த ஆவணங்கள் சுத்தம் செய்யப்படாமல் இருந்தால் அவை எதிர்மறையான சக்திகளை ஈர்க்கும். எனவே வீட்டில் பழைய ஆவணங்களை சேமித்து வைக்க விரும்பினால் அவற்றிற்கு தகுந்த இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பெரும்பாலும் இது போன்ற ஆவணங்களை டிஜிட்டல் ஆவணங்களாக சேமித்து வைப்பது நல்லது .

அழுக்கு மற்றும் தூசி படிந்த ஜன்னல்கள்: 

பொதுவாக நமது நேர்மறையான ஆற்றல் வீட்டிற்கு வெளியே தான் இருக்கும். அதனால்தான் அவை வீட்டிற்குள் வர கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்கிறோம். அவ்வாறு வரக்கூடிய நேர்மறையான ஆற்றலானது தூசி படிந்த ஜன்னல்கள் வழியாக வீட்டிற்குள் வரும்போது எதிர்மறை சக்திகளாக மாறிவிடும் இதனால் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவு போன்றவற்றை தூசி இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இறந்த தாவரங்கள் :

வீட்டிற்கு உள்ளேயும் வீட்டிற்கு வெளியேயும் நாம் வளர்க்கும் தாவரங்கள் அல்லது இருக்கும் தாவரங்கள் நல்ல முறையில் இருக்கின்றனவா என பார்த்துக் கொள்ள வேண்டும் அவற்றை தினமும் பராமரிக்க வேண்டும். வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இறந்த தாவரங்கள் இருந்தால் அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mistakes that need to be corrected to stay in the wealth that has come home


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->