இரவை விட அதிகாலையில் உடலுறவு வைத்துக்கொள்வதால் இவ்வளவு நன்மைகளா ?
இரவை விட அதிகாலையில் உடலுறவு வைத்துக்கொள்வதால் இவ்வளவு நன்மைகளா ?
இரவை விட அதிகாலையில் உடலுறவில் ஈடுபடும் போது கணவன் மற்றும் மனைவிக்கு மனதளவில் நன்மைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக திருமணமான ஆணும், பெண்ணும், இரவில் உடலுறவு கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலோனோர் அதனையே கடைபிடித்தும் வருகின்றனர்.
சிலருக்கு விருப்பம் இல்லையென்றாலும், இரவு நேரத்தில், அவசர அவசரமாக உடலுறவில் ஈடுபட்டு தூங்கி விடுகின்றனர்.
ஆனால் இதில்,சில ஆண்கள் மட்டும் வழக்கத்திற்கு மாறாக அதிகாலையில் உறவு கொள்வதையே விரும்புகின்றனர்.
ஆனால், பெண்கள் காலை நேரத்தில் வேகமாக எழுந்துவிட்டு என்ன சமையல் செய்யலாம்? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பனுமே? என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போடு கணவர் உடலுறவுக்கு முயற்சிக்கும் போது இப்பொழுது வேணாம் இரவு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு தவிர்க்க முயற்சிப்பார்கள்.
ஆனால் இரவு நேரத்தில், உறவு கொள்வதை விட அதிகாலையில் உடலுறவு கொள்வதே அதிக நன்மைகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவ்வாறு அதிகாலை நேரத்தில் உடலுறவு கொள்ளும் போது ஆக்சிடோசின் எனப்படும், ரசாயனம் ஒன்று வெளிப்படும். இந்த ரசாயனம் நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க பெரிதும் உதவிகரமாக இருக்கும். மேலும், மன அமைதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
English Summary
advantages of having sex at early morning