கணவரின் கண்முன்னே மனைவியை காரில் கசக்கிய கொடூரர்கள்.. காரின் எண்ணை மனதில் வைத்து கணவர் கொடுத்த அதிர்ச்சி..? - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்று அரியானா. அங்கு முன்பு கூர்கான் என்று அழைக்கப்பட குருகிராமில் ஒரு பெண் கணவரின் கண்முன்னே கயவர்களால் சிதைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

காரில் இருந்து இளம்பெண்ணை பலவந்தமாக இறக்கிய 4 பேர் கொண்ட கும்பல், கணவன் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குருகிராம் பகுதியை சேர்ந்தவர் சுமா (வயது 22). இவர் தனது கணவர், அவரது தம்பி ஆகியருடன் காரில், உறவினர் வீட்டு விழாவுக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

செக்டார் 56 அருகே வந்தபோது, சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தினர் கணவர். அப்போது அங்கு இரண்டு கார்கள் வேகமாக வந்து நின்றன.

பின்னால் காரில் வந்த இளைஞர்கள் இவர்களை துப்பாக்கி முனையில் பிடித்துக் கொண்டனர்.

பின்னர் காரில் இருந்த பெண்ணை பலவந்தமாக கீழே இறக்கிய அவர்கள் அந்த பெண்ணின் கணவன் முன்னிலையில் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

காவல்துறையில் புகார் அளித்தால் கொன்று விடுவதாகவும் அவர்கள் மிரட்டிச் சென்றனர். அதில் ஒரு காரின் எண்ணை நினைவில் வைத்துக் கொண்ட அந்தப் பெண்ணின் கணவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதை அடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதை போலவே பல சம்பவங்கள் அந்த பகுதியில் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றன.

அங்கெல்லாம் அப்படி இருக்க, தமிழகத்தில் ஒரு சில குற்ற செயல்கள் நிகழ்ந்தாலும் பெண்களை போற்றும் பூமியாக தமிழக திகழ்வதால் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவம் நடைபெறும் பட்டியலில் கடைசி இடங்களில் தான் வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman-raped-in-front-of-husband-brother-in-law-4-detained


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->